Sunday, April 28, 2024
Home » டயனா வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு

டயனா வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு

பாராளுமன்ற உறுப்புரிமை தொடர்பான

by gayan
October 19, 2023 6:45 am 0 comment

இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்துச் செய்வதற்கான உத்தரவை பிறப்பிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான தீர்ப்பு, எதிர்வரும் 31ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதிபதி

நிஸங்க பந்துல கருணாரத்ன, ஸ்வர்ணாதிபதி மற்றும் ஏ. மரிக்கார் உள்ளிட்ட மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் இது தொடர்பான தீர்ப்பை நேற்று (18) அறிவிப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால், இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, இது தொடர்பான தீர்மானம் எதிர்வரும் 31ஆம் திகதி அறிவிக்கப்படுமென மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதிபதி நிஸங்க பந்துல கருணாரத்ன தெரிவித்தார்.இந்த மனுவை சமூக ஆர்வலர் ஓஷல ஹேரத் சமர்ப்பித்திருந்தார்.

டயானா கமகே ஒரு பிரிட்டன் பிரஜை என மனுதாரர் கூறியிருந்தார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT