Sunday, April 28, 2024
Home » பாக்கு நீரிணையை நீந்திக் கடக்கும் மட்டக்களப்பு மாணவர்கள் மூவர்

பாக்கு நீரிணையை நீந்திக் கடக்கும் மட்டக்களப்பு மாணவர்கள் மூவர்

by Prashahini
October 18, 2023 3:38 pm 0 comment

இந்தியாவிற்கும், இலங்கைக்கும் இடையிலான பாக்கு நீரிணையை நீந்திக் கடக்கும் முயற்சியில் மட்டக்களப்பு புனித மிக்கேல் தேசிய கல்லூரி சிரேஷ்ட சாரணிய மாணவர்கள் மூவர் குதிக்கவுள்ளனர்.

இக் கல்லூரியின் 150 வருட பூர்த்தி விழாவின் ஒரு அங்கமாக இடம்பெறவுள்ள இம்முயற்சி கடல்நீரில் பிளாஸ்டிக் பொருட்கள் கலப்பதனை தடுப்பதற்கான விழிப்புணர்வூட்டும் ஒரு மையப் பொருளாக அமையவுள்ளதுடன் ஏற்கனவே ஏற்படுத்தப்பட்டுள்ள ஆசிய சாதனையை முறியடிப்பதற்கான முயற்சியாகவும் உள்ளது.

இம் முயற்சி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (22) அதிகாலை 1.00 மணிக்கு தனுஷ்கோடியிலிருந்து ஆரம்பமாகி தலைமன்னாரில் நிறைவடையவுள்ளது.

இம்முயற்சியில் சகோதரர்களான புளோரிங்டன் டயன் பிரிடோ, புளோரிங்டன் டயன் மற்றும் இருதயநாதன் கெல்வின் கிசோ ஆகியோர் பங்கேற்கவுள்ளனர் .
இவர்களிடம் இலங்கை திருநாட்டின் தேசிய கொடி,கல்லூரி கொடி, என்பன கையளிக்கும் நிகழ்வு கல்லூரி அதிபர் தலைமையில் இடம்பெற்றது.

மாளிகைக்காடு குறூப் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT