கிழக்கு மாகாண அரச பதவிநிலை உத்தியோகத்தர்களுக்கான பாடல் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு நினைவுச் சின்னமும் பாராட்டு பத்திரமும் வழங்கி வைக்கும் நிகழ்வு மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி கேட்போர் கூடத்தில் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் ச.நவநீதன் தலைமையில் இடம்பெற்றது.
வெற்றி பெற்ற திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் பணிபுரிகின்ற அரச உத்தியோகத்தர்களுக்கான பாராட்டுப் பத்திரமும் நினைவுச் சின்னமும் விசேட பட்டங்களும் வழங்கி வைக்கப்பட்டன. இந்நிகழ்வில் அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் செயலாளர் எம். ஏ. சி. அகமது ஷாபிர் அவர்களுக்கு ‘கிழக்கின் மதுரக்குரலோன்’ எனும் பட்டமும், கே எம். கபீர் அவர்களுக்கு ‘கிழக்கின் வதனக்குரலோன்’ பட்டமும், எம்.பியாஸ் அவர்களுக்கு ‘கிழக்கின் பாடகர் திலகம்’ எனும் பட்டமும் வழங்கப்பட்டன. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜாவும், கௌரவ அதிதிகளாக மட்டக்களப்பு வலய பிரதிக்கல்வி பணிப்பாளர் ஷாமினி ரவிராஜா, மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஜி. சுகுணன், காத்தான்குடி பிரதேச செயலாளர் உ. உதய ஸ்ரீதர், கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் அதிசயராஜ், அம்பாறை மாவட்ட கலாசார ஏ எல். தௌபீக், கலாசார உத்தியோத்தர் எம். எஸ்.ஜௌபர் மற்றும் கவிஞர் சோலைக்கிளி உட்பட பல பிரமுகர்கள் கலந்து சிறப்பித்தனர்.
எம் எப். நவாஸ்…?
(திராய்க்கேணி தினகரன் நிருபர்)