உஸ்பகிஸ்தான் விமானநிலையத்திற்கு அருகில் உள்ள களஞ்சியம் ஒன்றில் ஏற்பட்ட வெடிப்பில் ஒருவர் கொல்லப்பட்டு மேலும் 162 பேர் காயமடைந்துள்ளனர். இந்த வெடிப்பினால் அருகில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் ஜன்னல் கதவுகள் உடைந்துள்ளன.
இதில் ஜன்னல் கதவு உடைந்து தன்மீது விழுந்ததால் பதின்ம வயதினர் ஒருவர் கொல்லப்பட்டிருப்பதாக அந்நாட்டு உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. 138 பேர் காயத்திற்கு சிகிச்சை பெற்றிருப்பதாகவும் 24 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் அது குறிப்பிட்டது.
எனினும் தலைநகரில் உள்ள சர்வதேச விமானநிலையத்தில் விமானசேவைகள் வழக்கம்போல் இடம்பெற்றுள்ளன.
இந்த களஞ்சியத்திற்கு மேலால் இரவு வானில் தீ வெளிவரும் படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளன. எனினும் இந்த வெடிப்புக்கான காரணம் உறுதி செய்யப்படவில்லை.