Wednesday, May 8, 2024
Home » நல்லூரான் காளை மாடு முட்டி ஒருவர் உயிரிழப்பு

நல்லூரான் காளை மாடு முட்டி ஒருவர் உயிரிழப்பு

by Prashahini
September 15, 2023 9:44 am 0 comment

நல்லூரான் காளை மாடு முட்டி ஆலய பணியாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் இருபாலை பகுதியை சேர்ந்த 60 வயதுடைய நித்தியசிங்கம் என்பவரே உயிரிழந்துள்ளார்.

நல்லூர் கந்தசுவாமி ஆலய நந்தவனத்தில் பணியாற்றும் பணியாளர் நேற்று (14) மாலை நந்தவனத்தில் வளர்க்கப்படும் காளை மாட்டிற்கு உணவளிக்க சென்ற சமயம் மாடு அவரை முட்டியுள்ளது.

மாடு முட்டியதில் காயமடைந்தவரை அங்கிருந்து மீட்டு , வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்துள்ளார்.

நல்லூர் மகோற்சவம் நேற்று மாலை கொடியிறக்கத்துடன் நிறைவுக்கு வந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

யாழ்.விசேட நிருபர்

 

 

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT