உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் தைத்த ஆடைகளில் முன்னணி வகிக்கும் GFlock, நாட்டில் அதன் நான்காவது கிளையை நாளை (15) நுகோகொடையின், தெல்கந்தவில் திறக்கவுள்ளதாக அதன் தலைவர் ரணில் வில்லத்தரகே தெரிவித்துள்ளார்.
2013 இல் நிறுவப்பட்ட GFlock, பாரம்பரியத்திற்கு அப்பாற்பட்ட அதிநவீன பாணிகளுடன், தைத்த ஆடை தேவைகளுக்காக இளைஞர்களின் நம்பிக்கையை வென்றுள்ளது. தற்போது, GFlock உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் முன்னணி வர்த்தகநாமமாக மாறியுள்ளது. குறிப்பாக அந்நியச் செலாவணியை ஈட்டுவதற்காக படைப்பாற்றல் மிக்க இளைஞர்களின் அனுபவங்களைப் பயன்படுத்தி இலங்கையின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கு பங்களிக்கும் வர்த்தக நாமமாக அது விளங்குகின்றது.
எதிர்வரும் சில வருடங்களில், இலங்கையிலும் சர்வதேச அளவிலும் பரந்த வர்த்தக நாமமாக இந்த வர்த்தக நாமத்தை மேலும் உயர்த்தும் நோக்குடன், நாட்டில் தனது விஸ்தரிப்பை விரிவுபடுத்தி, தனது கூட்டாண்மை மற்றும் சமூகப் பொறுப்பை நிறைவேற்றி நிறுவனம் செயற்பட்டு வருகின்றது.
GFlock குழுவானது, வாடிக்கையாளர்களின் உரிமைகள் மற்றும் நலன்களுக்கு மதிப்பளித்து, தன்னலமற்ற தன்மை, ஒழுக்கம், உறுதிப்பாடு, விடாமுயற்சி, நேர்மையுடன் அதன் வணிகத்தைத் தொடர்கிறது.
GFlock வலையமைப்பு கிளைகளில் நவீன வடிவமைப்புகள், அழகியல் மற்றும் சமீபத்திய வர்த்தக தொழில்நுட்பம் ஆகியன உள்ளடக்கப்பட்டுள்ளன.தமது வாடிக்கையாளர்களுக்கு வித்தியாசத்துடன் ஆக்கபூர்வமான தயாரிப்புகளைத் தெரிவு செய்து கொள்வனவு செய்வதற்கான வாய்ப்பை நிறுவனம் வழங்குகிறது.
GFlock அதன் கிளைகளை ஏற்கனவே கொள்ளுப்பிட்டி, பத்தரமுல்லை, நீர்கொழும்பு ஆகியட இடங்களில் வாரத்தில் ஏழு நாட்களும் தங்களது வாடிக்கையாளர்களுக்காக திறந்துள்ளது.