நாளை நள்ளிரவு (02) முதல் பஸ் கட்டணங்களை 4.01% இனால் அதிகரிக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
அத்துடன், ஆகக் குறைந்த கட்டணமான ரூ. 30 இல் மாற்றம் மேற்கொள்ளப்படவில்லை எனவும் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
2.18pm
நாளை முதல் பஸ் கட்டணங்களை 4% இனால் அதிகரிக்க தீர்மானம்
– முச்சக்கர வண்டி கட்டணங்களை அதிகரிக்காதிருக்க முடிவு
நாளை (02) முதல் பஸ் கட்டணங்களை 4% இனால் அதிகரிக்கவுள்ளதாக பஸ் சங்கங்கள் தெரிவித்துள்ளன.
இன்று (01) முதல் அமுலாகும் வகையில் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆகக் குறைந்த கட்டணமான ரூ. 30 இல் மாற்றம் செய்யாதிருக்க தீர்மானித்துள்ளதாக, சங்கங்கள் குறிப்பிட்டுள்ளன.
இதேவேளை, முச்சக்கர வண்டி கட்டணங்களை அதிகரிக்காதிருக்க தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.