இன்று நள்ளிரவு (01) முதல் அமுலாகும் வகையில் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு:
– பெற்றோல் 92: ரூ. 13 இனால் (ரூ. 361)
– பெற்றோல் 95: ரூ. 42இனால் (ரூ. 417)
– ஒட்டோ டீசல்: ரூ. 35 இனால் (ரூ. 341)
– சுப்பர் டீசல்: ரூ. 1 இனால் (ரூ. 359)
– மண்ணெண்ணெய்: ரூ. 5 இனால் (ரூ. 231)
இன்று (01) முதல் அமுலுக்கு வரும் வகையில், எரிபொருட்களின் விலைகள் திருத்தப்பட்டுள்ளதாக, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் (CPC) அறிவித்துள்ளது.
குறித்த விலை அதிகரிப்புக்கு அமைய,
- பெற்றோல் ஒக்டேன் 92: ரூ. 348 இலிருந்து ரூ. 13 இனால் அதிகரிப்பு
- பெற்றோல் ஒக்டேன் 95: ரூ. 375 இலிருந்து ரூ. 42 இனால் அதிகரிப்பு
- ஒட்டோ டீசல்: ரூ. 306 இலிருந்து ரூ. 35 இனால் அதிகரிப்பு
- சுப்பர் டீசல்: ரூ. 358 இலிருந்து ரூ. 1 இனால் அதிகரிப்பு
- மண்ணெண்ணெய்: ரூ. 226 இலிருந்து ரூ. 5 இனால் அதிகரிப்பு
அந்த வகையில் புதிய எரிபொருட்களின் புதிய விலைகள்,
- பெற்றோல் ஒக்டேன் 92: ரூ.361
- பெற்றோல் ஒக்டேன் 95: ரூ. 417
- ஒட்டோ டீசல்: ரூ.341
- சுப்பர் டீசல் (4 ஸ்டார் யூரோ 4) – ரூ.359
- மண்ணெண்ணெய் : ரூ.231
LIOC நிறுவனமும் குறித்த விலைத் திருத்தத்தை அமுல்படுத்துவதாக வழக்கம் போன்று அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இறுதியாக கடந்த ஓகஸ்ட் 01 முதல், பெற்றோல் 92 ரூ.348; பெற்றோல் 95 ரூ.375; டீசல் ரூ.306; சுப்பர் டீசல் ரூ.358; மண்ணெய் ரூ. 226 ஆக விலை திருத்தம் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கடந்த ஜூலை 01 முதல், பெற்றோல் 92 ரூ.328; பெற்றோல் 95 ரூ.365; டீசல் ரூ.308; சுப்பர் டீசல் ரூ.346; மண்ணெய் ரூ. 236 ஆக விலை திருத்தம் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கடந்த ஜூன் 01 முதல் பெற்றோல் 92 ரூ.318; பெற்றோல் 95 ரூ.385; டீசல் ரூ.310; சுப்பர் டீசல் ரூ.330; மண்ணெய் ரூ. 245 ஆக விலை திருத்தப்பட்டது.