கபோன் நாட்டில் இராணுவ சதிப்புரட்சி மூலம் கடந்த புதன்கிழமை (30) ஆட்சியை கைப்பற்றிய இராணுவம் இடைக்காலத் தலைவராக ஜெனரல் பிரிஸ் ஒலிகுய் நுகுமாவை நியமித்துள்ளது.
முன்னதாக ஜெனரல் நுகுமாவை அவரது இராணுவத்தைச் சேர்ந்தவர்கள் தலைநகர் லிப்ரவில்லேவில் வெற்றிக் கொண்டாட்டத்துடன் அழைத்து வந்தனர்.
பதவி கவிழ்க்கப்பட்ட ஜனாதிபதி அலி பொங்கோ தனது வீட்டில் இருந்து வீடியோ ஒன்றில் தோன்றியுள்ளார். அதில் தனக்காக குரல் கொடுக்கும்படி உலகெங்கும் உள்ள நண்பர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.
முன்னாள் பிரான்ஸ் காலனி நாடான கபோன் ஆபிரிக்காவின் மிகப்பெரிய எண்ணெய் உற்பத்தி நாடுகளில் ஒன்றாகும்.
பொங்கோ குடும்பத்துடன் நெருக்கம் கொண்ட பிரான்ஸுடன் ஐக்கிய நாடுகள் சபை, ஆபிரிக்க ஒன்றியம் இந்த இராணுவ சதிப்புரட்சிக்கு கண்டனம் வெளியிட்டுள்ளன.