கத்தோலிக்கத் திருச்சபை கடந்த ஞாயிறில் சுதேச குருக்கள் தினத்தை சிறப்பித்தது.
சிறப்பு வாய்ந்த புனிதரும் பங்குத்தந்தையர்களின் பாதுகாவலருமான புனித ஜான் மரிய வியான்னி பஎளிமையான வாழ்க்கை, பரிவுடன் கூடிய செயல்கள், திருவருளடையாளங்களில் பற்றுறுதி, இறைவனின் விருப்பத்தை நிறைவேற்றுவதில் ஆர்வம் கொண்டு மனிதராக வாழும்போதே புனித பண்புகளால் சிறந்து விளங்கியவர்
திருநற்கருணையின் முன்னால் செலவிடும் நேரத்தைப் பொன்னான நேரமாகக் கருத வேண்டும் என்று கூறியதோடு மட்டுமல்லாமல் அதன்படியே வாழ்ந்தவர்
தனது வாழ்வின் ஆற்றல் திருநற்கருணையில் இருந்தே கிடைக்கின்றது என்பதனை தனது செப செயல்பாடுகளால் வெளிப்படுத்தியவர். எளிமையான பிறரன்புச் செயல்கள் வழியாக இறைமக்களாகிய நமக்கு விண்ணகம் செல்லும் புனிதத்தின் பாதையைக் காட்டியவர்.
தான் குருவாக திருப்பொழிவு பெற்றால் கடவுளுக்காக ஏராளமான ஆன்மாக்களை வென்றெடுப்பேன் என்ற கூறி அவ்வாறே பல ஆன்மாக்களை இறைபாதம் கொண்டு சேர்த்தவர்.
ஒவ்வொருவருக்கும் வழங்கப்படும் அருள்பணித்துவ அழைப்பு, அவரவர் திறமையின் அடிப்படையில் வழங்கப்படும் சன்மானம் அல்ல, மாறாக, இறைவனின் பேரன்பினால் வழங்கப்படும் ஒரு பெரும் கொடை என்பதை நமக்கு உணர்த்தியவரும் புனித ஜான் மரிய வியான்னியே.
மெரினா ராஜ்