கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கும், அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் வைத்தியர் தர்ஷன சிறிசேன மற்றும் செயலாளர் வைத்தியர் ஹரித்த அலுத்கே ஆகியோருக்கிடையில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
கிழக்கு மாகாணத்தில் ஆளுநரால் முன்னெடுக்கப்படும் சேவைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக தெரிவித்த அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA), ஆளுநரால் சுகாதார துறைக்காக முன்னெடுக்கப்பட்டு வரும் வேலைத்திட்டங்கள் வெற்றிபெற வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளது.
கிழக்கு மாகாணத்தில் வைத்தியர்கள் தங்களுடைய சேவைக்காக தங்களை முழுமையாக அர்ப்பணித்து வருவதற்காக ஆளுநர் செந்தில் தொண்டமான் இதன்போது பாராட்டுகளை தெரிவித்ததோடு, அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்குவதாகவும் உறுதியளித்தார்.