356
பசுபிக் பெருங்கடலில் இரண்டு மாதங்களாக பச்சை மீன்களை சாப்பிட்டு மழை நீரை குடித்து உயிர் தப்பிய அவுஸ்திரேலிய நாட்டு மாலுமி ஒருவர் சிறந்த உடல்நிலையுடன் மீட்கப்பட்டுள்ளார்.
சிட்னியைச் சேர்ந்த 51 வயது டிம் ஷடொக் என்பவர் தனது நாயுடன் கடந்த ஏப்ரலில் மெக்சிகோவில் இருந்து பிரான்ஸின் பொலினிசியா தீவுக்கு புறப்பட்ட நிலையில் புயலில் சிக்கி அவரது படகு சேதமடைந்துள்ளது.
அவர் கடலில் தத்தளிப்பதை ஹொலிகொப்டர் ஒன்று அவதானித்ததை அடுத்தே இழுவை படகு ஒன்று அவரையும் அவரது நாயையும் மீட்டுள்ளது.