ஜோன் கீல்ஸ் குழுமத்தின் தரவு மற்றும் மேம்பட்ட பகுப்பாய்வு மையமான ஒக்டேவ், இலங்கையில் உள்ள மதிப்பிற்குரிய மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறையுடன் தனது கூட்டுச்செயல்பாடை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் (MOU) தரவு மற்றும் மேம்பட்ட பகுப்பாய்வு திறன்களின் வளர்ச்சியை விரைவுபடுத்தும் மற்றும் துறையில் திறமையான நிபுணர்களின் தொகுப்பை வளர்க்கும் ஒரு கூட்டுவாழ் உறவை வளர்ப்பதற்கான பரஸ்பர அர்ப்பணிப்பை உறுதிப்படுத்துகிறது.
இலங்கையில் தரவு பகுப்பாய்வுகளை முன்னேற்றுவதற்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு முன்னணி நிறுவனமாக, ஒக்டேவ் கல்விசார் பங்காளிகளுடன் வலுவான உறவுகளை வளர்ப்பதன் முக்கியத்துவத்தை அங்கீகரிக்கிறது. குழுமத்தின் தலைவர் கிருஷான் பாலேந்திரா கூறுகையில், “எப்போதும் வளர்ந்து வரும் தொழில்நுட்பம் மற்றும் மேம்பட்ட பகுப்பாய்வு நிலப்பரப்புடன், இந்தத் துறையில் வெற்றிபெறுவதற்கான திறமையுடன் அடுத்த தலைமுறையை நாம் ஆயத்தப்படுத்துவது இன்றியமையாதது. மொரட்டுவ பல்கலைக்கழகத்துடனான கூட்டுச்செயல்பாடை, பல்கலைக்கழக வலையமைப்பிற்குள் இருக்கும் ஆற்றல்மிக்க திறமைக் குழுவுடன் நெருக்கமான ஒத்துழைப்பை நிறுவனமயமாக்குவதற்கான ஒரு மூலோபாய படியாகும் மற்றும் இலங்கையில் ஒரு வலுவான மேம்பட்ட பகுப்பாய்வு சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதற்கான எங்கள் பார்வைக்கு இணங்குகிறது. ஒக்டேவ் இன் தொழிற்துறை அனுபவத்தையும் மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் கல்விசார் தனிச்சிறப்பையும் இணைப்பதன் மூலம், இந்த இளங்கலைப் பட்டதாரிகளுக்கு வலுவூட்டவும்> அவர்களின் திறமைகளை வளர்த்து அதன் மூலம் புதுமையாக்கம் செய்யவும் முடியும்.’
இந்த கூட்டுச்செயல்பாட்டின் நிமித்தமாக, ஒக்டேவ் இன் அனுபவம் வாய்ந்த நிபுணர்களுடன் இணைந்து பணிபுரியும் வாய்ப்பை, மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் திறமையான மற்றும் ஆர்வமுள்ள இளங்கலைப் பட்டதாரிகளை பயிற்சியாளர்களாக ஈடுபடுத்த உதவுகிறது. தரவு அறிவியல், இயந்திர கற்றல் பொறியியல், தரவுப் பொறியியல், பிஐ பொறியியல் மற்றும் மேம்பட்ட பகுப்பாய்வு பயன்பாட்டு வழக்குகளை வழங்குதல். கூடுதலாக, பல்கலைக்கழகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட பல்வேறு தொழில் கண்காட்சிகளில் ஒக்டேவ் கலந்து கொள்ளுதல், தரவு பகுப்பாய்வுகளின் அற்புதமான உலகம் மற்றும் அது வைத்திருக்கும் தொழில் வாய்ப்புகள் பற்றிய மதிப்புமிக்க நுண்ணறிவுகளை மாணவர்களுக்கு வழங்கும்.
இதற்கு இணையாக, ஒக்டேவ், தரவு அறிவியல், இயந்திர கற்றல் பொறியியல் மற்றும் தரவுப் பொறியியல் ஆகிய குறிப்பிட்ட துறைகள் உட்பட தரவு பகுப்பாய்வு தொடர்பான அதன் பாடத்திட்டத்தை வலுப்படுத்த மொரட்டுவ பல்கலைக்கழகத்துடன் நெருக்கமாக பணியாற்றும். தொழில்துறையின் சிறந்த நடைமுறைகள் மற்றும் வளர்ந்து வரும் சார்வுகளை இணைப்பதன் மூலம், வேகமாக வளர்ந்து வரும் தரவு மற்றும் மேம்பட்ட பகுப்பாய்வு முன்னோக்கால் கோரப்படும் சமீபத்திய அறிவு மற்றும் திறன்களை மாணவர்கள் பெற்றிருப்பதை உறுதிசெய்ய கூட்டாண்மை உதவும். ஒக்டேவ் இன் அனுபவமிக்க வல்லுநர்கள் மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் மாணவர்களால் மேற்கொள்ளப்படும் இறுதி ஆண்டு திட்டங்களுக்கு விருந்தினர் விரிவுரையாளர்களாகவும் மற்றும் மேற்பார்வையாளர்களாகவும் பணியாற்றுவார்கள்.
“இந்த கூட்டாண்மை கொண்டு வரும் வாய்ப்புகள் குறித்து நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்” என்று மொரட்டுவை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் என்.டி.குணவர்தன தெரிவித்தார். ” ஒக்டேவ் உடன் நெருக்கமாகப் பணியாற்றுவது எமது மாணவர்களுக்கு விலைமதிப்பற்ற தொழிற்துறை வெளிப்பாட்டினை வழங்குவதோடு கல்வித்துறைக்கும் தொழில்துறைக்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்க உதவும். இலங்கையில் தரவு பகுப்பாய்வு நிலப்பரப்பின் வளர்ச்சிக்கு பங்களிப்பை ஏற்படுத்துவதற்கும், தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய முன்முயற்சிகளை உருவாக்கவும் நாங்கள் எதிர்நோக்கியுள்ளோம்.”
ஒக்டேவ் மற்றும் மொரட்டுவ பல்கலைக்கழகத்திற்கு இடையிலான கூட்டுச்செயல்பாடு அடுத்த தலைமுறை தரவு மற்றும் மேம்பட்ட பகுப்பாய்வு நிபுணர்களை வளர்ப்பதற்கும் வலுவூட்டுவதற்குமான; பகிரப்பட்ட அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது. இந்த கூட்டாண்மையின் மூலம், இலங்கையில் ஒரு வலுவான தரவு பகுப்பாய்வு சுற்றுச்சூழல் அமைப்பின் வளர்ச்சிக்கு பங்களிப்பதன் ஊடாக புதுமைகளை ஊக்குவித்தலையும் சமூக-பொருளாதார வளர்ச்சியில் உந்துதலையும் இரு நிறுவனங்களும் நோக்கமாகக் கொண்டுள்ளன.
கொழும்பு பங்குபரிமாற்றத்தில் இலங்கையின் பெரியளவிலான நிறுவனமாக பட்டியலிடப்பட்ட கூட்டு நிறுவனமான ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பிஎல்சி (ஜேகேஎச்) 7 வகையான பரந்துபட்ட தொழில் துறைகளில் 70 இற்கும் மேற்பட்ட நிறுவனங்களை நடாத்தும் ஜோன் கீல்ஸ் குழுமம், 2020 ஆம் ஆண்டில் வணிகத்தில் காலடி வைத்து இலங்கையின் பொருளாதாரம் மற்றும் வளர்ச்சிக்கு பங்களித்த 150 ஆண்டுகளைக் கொண்டாடுகிறது. 14,000 க்கும் மேற்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்பினை அளிப்பதோடு ஜோன் கீல்ஸ் குழுமம் எல்.எம்.டி இதழால் கடந்த 16 ஆண்டுகளாக இலங்கையின் ‘மிகவும் மதிப்பிற்குரிய நிறுவனம்’ என்று பெயர் பெற்றுள்ளது. உலக பொருளாதார மன்றத்தின் முழு அங்கத்தவராக இருக்கும் அதே வேளை ஐ.நா குளோபல் கொம்பக்டின் அங்கத்துவத்தையும் கொண்ட ஜே.கே.எச் ஆனது ஜோன் கீல்ஸ் ஃபவூண்டேஷன் ஊடாக “எதிர்காலத்திற்கான நாட்டினை கட்டியெழுப்புதல்” என்ற அதன் கூட்டாண்மை சமூக பொறுப்பு நோக்கினை நோக்கி பயணிக்கின்றதுடன் இலங்கையில் பிளாஸ்டிக் மாசினை குறைக்க ஒரு வினையூக்கியாக ‘பிளாஸ்டிக்சைக்கிள்’ ஊடாக செயற்படுகின்றது.