பகிஷ்கரிப்புக்கு தயாராகும் புகையிரத ஊழியர்கள்; உடனடியாக அனைத்து விடுமுறைகளும் இரத்து

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் புகையிரத சேவையில் உள்ள அனைத்து ஊழியர்களின் விடுமுறையும் இரத்து செய்யப்படுவதாக, போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

அதற்கமைய, மறு அறிவித்தல் வரை குறித்த உத்தரவு அமுலில் இருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, புகையிரத லொகோமோடிவ் பொறியியலாளர் சங்கம் பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் இவ்வறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது

இன்று நள்ளிரவு (15) முதல் இலங்கை புகையிரத திணைக்களத்தின் லோகோமோட்டிவ் புகையிரத பொறியியலாளர்கள் சங்கம் 24 மணித்தியால வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக தெரவித்துள்ளது.

பல்வேறு தொழிற்சங்கங்கள் நாளையதினம் (15) பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு, நாடளாவிய தொழிற்சங்க போராட்டத்தை நடாத்தவுள்ளதாக தெரிவித்துள்ளன.

இந்நிலையில், அஞ்சல் சேவைகளை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தி ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய அதி விசேட வர்த்தமானியொன்று வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...