புகையிரத சாரதிகளின் பணிப்பகிஷ்கரிப்பு நிறைவு

புகையிரத சாரதிகளின் பணிப்பகிஷ்கரிப்பு நிறைவுக்கு வந்துள்ளது.

அதிகாரிகளுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து இவ்வாறு பணிப்பகிஷ்கரிப்பு நிறைவுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

புகையிரத எஞ்சின் சாரதிகளின் பணிப் பகிஷ்கரிப்பு காரணமாக, கரையோர மற்றும் பிரதான பாதையிலான பல்வேவறு புகையிரதங்கள் இன்றையதினம் (13) இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக பொதுமக்கள் பாரிய சிரமங்களை எதிர்கொண்டதோடு, சேவையில் ஈடுபட்ட புகையிரதங்களில் மக்கள் கூட்டமாக பயணித்தமை அவதானிக்கக் கூடியதாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதற்கமைய, மஹவ, ரம்புக்கணை, குருணாகல் ஆகிய நிலையங்களிலிருந்து கொழும்பு கோட்டை மற்றும் பொல்கஹவெல - மருதானை ஆகிய பிரதான பாதையிலான புகையிரதங்கள் இயங்காது என அறிவிக்கப்பட்டிருந்தது.

இது தவிர, கரையோர பாதையிலான ஹிக்கடுவ, அளுத்கம, களுத்துறை ஆகிய நிலையங்களிலிருந்து மருதானை வரையான புகையிரதங்கள் இன்று இடம்பெறாது என அறிவிக்கப்பட்டிருந்தது.

புத்தளம் பாதையிலான, சிலாபம் - கொழும்பு கோட்டைக்கான 2 புகையிரத சேவைகள் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...