வீதி தாழிறங்கியதால் போக்குவரத்து பாதிப்பு

கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் மஸ்கெலியா நோட்டன் பிரதான வீதியில் வீதியில் 5ஆம் கட்டை பகுதியில் தாழிறங்கியுள்ளது.

அதே போல் நோட்டன் கினிகத்தேன பிரதான வீதியில் அட்லிஸ் பகுதிகளில் தாழ் இறங்கியுள்ளது.

இதனால் அவ்வீதிகள் ஊடாக வாகனங்கள் சேவையில் ஈடுபடுத்த முடியாத நிலை தோன்றியுள்ளது.

இதனால் அவிசாவளை டிப்போ பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்த முடியாத நிலை தோன்றியுள்ளது. பாடசாலை மாணவர்கள் மற்றும் மாணவிகள் பயணிகள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.

இது குறித்து வீதி அபிவிருத்தி அதிகாரசபை பொறியாளாலரிடம் கேட்ட போது அவர் கூறுகையில்.

பாரிய அளவில் வீதி தாழ் இறங்கியுள்ளது இதனை செப்பனிட இன்னும் சில நாட்களாகும் எனவே தற்காலிக இரும்பு பாலங்கள் பொருத்த உள்ளது என அவர் கூறினார்.

அதற்கு இன்னும் இரண்டு வாரங்களுக்கு மேல் எடுக்கும் என அவர் கூறினார்.

(மஸ்கெலியா தினகரன் விசேட நிருபர் - ரி. பெருமாள்)


Add new comment

Or log in with...