இன்று (20) முதல் அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் நோயாளர் காவு வண்டிகளுக்கு/ அம்பியூலன்ஸ்களுக்கு கட்டணம் அறவிடாதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நெடுஞ்சாலைகள் அமைச்சு இதனை அறிவித்துள்ளது.
அமைச்சர் ஜோன்ஸ்டன் பெனாண்டோவின் ஆலோசனைக்கமைய குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக, அமைச்சு தெரிவித்துள்ளது.
தற்போதுள்ள கொவிட்-19 நிலைமை கருதி குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
நேற்றையதினம் (19) இலங்கையில் வெளிநாட்டில் இருந்து வந்து தனிமைப்படுத்தப்பட்ட 32 பேர் உள்ளிட்ட 3,623 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இது ஒரே நாளில் பதிவான அதிகூடிய தொற்றாளர்களின் பதிவாகும்.
Add new comment