Friday, March 12, 2021 - 5:14pm
தென்னாபிரிக்காவில் பரவி வரும், மிக வேகமான பரவலைக் கொண்ட கொரோனா வைரஸ் திரிபின் தொற்றைக் கொண்ட நபர் ஒருவர் இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோயெதிர்ப்பு மற்றும் கல உயிரியல் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சந்திம ஜீவந்தர இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
தன்சானியாவிலிருந்து வந்து தனிமைப்படுத்தல் மையத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஒருவரிடமிருந்து பெறப்பட்ட மாதிரியிலேயே இவ்வாறு குறித்த கொரோனா வைரஸ் திரிபு அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
Add new comment