பூஸா சிறையில் மேலும் 44 பேருக்கு கொரோனா தொற்று

பூஸா சிறையில் மேலும் 44 பேருக்கு கொரோனா தொற்று-44 More Imamates Tested Positive for COVID19 in Boossa Prison-Total Inmates 329

- சிறைச்சாலை கைதிகள் தொற்று 329 ஆக அதிகரிப்பு

பூஸா சிறைச்சாலையில் மேலும் 44 கைதிகளுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சிறைச்சாலைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் இதனை உறுதிப்படுத்தியுள்ளதாக, கொவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் அறிவித்துள்ளது.

ஏற்கனவே 285 கைதிகள் அடையாளம் காணப்பட்டதற்கமைய, நாட்டிலுள்ள சிறைச்சாலைகளில் இதுவரை கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை, 329 ஆக அதிகரித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...