தலைமன்னார் கிராம பகுதியில் 14 இலட்சம் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சா பொதிகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளதோடு, இரு சந்தேகநபர்களையும் கைது செய்துள்ளனர்.
இக்கைது நேற்று (22) இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் மன்னார் பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற இரகசியத் தகவலின் அடிப்படையில், தலைமன்னார் பொலிஸ் பிரிவில் உள்ள தலைமன்னார் கிராமம் பகுதியில் 14 கிலோ 170 கிராம் கொண்ட கேரள கஞ்சா பொதிகள் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக, மன்னார் பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது, குறித்த கேரள கஞ்சா பொதிகளை தம்வசம் வைத்திருந்த மற்றும் விற்பனை செய்த குற்றச்சாட்டுகளில் தலைமன்னார் கிராமத்தின் சிலுவை நகரைச் சேர்ந்த 21, 49 வயதுடைய இரு சந்தேகநபர்களை கைது செய்துள்ளதாக, மன்னார் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணைகளின் பின் மன்னார் நீதிமன்றில் சந்தேக நபர்களை ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
(மன்னார் குறூப் நிருபர் - றொசேரியன் லம்பேட்)
Add new comment