வீசா காலாவதி; நைஜீரிய பெண் கைது

வீசா காலாவதியான நிலையில் சட்டவிரோதமான முறையில் நாட்டில் தங்கியிருந்த குற்றச்சாட்டில், நைஜீரிய பெண் ஒருவர் கல்கிஸ்ஸை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (07) மாலை, கல்கிஸ்ஸை பகுதியில் இக்கைது இடம்பெற்றுள்ளது.

35 வயதுடையவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

சந்தேகநபரை இன்று (08) கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் எடுத்துள்ளனர்.

சந்தேகநபரிடம் கல்கிஸ்ஸை பொலிஸார் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


Add new comment

Or log in with...