மரையை வேட்டையாடியவர் கைதானார்

மரையொன்றை வேட்டையாடிய சந்தேகத்தின் பேரில் ஒருவரைக் கைது செய்துள்ளதுடன், மரையின் உடற் பாகங்கள் சிலவற்றை  மீட்டுள்ளதாக, பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்தனர்.

பொகவந்தலாவை, கல்கந்தை  தோட்டத்தில் சட்டவிரோதமாக மரையொன்றை வேட்டையாடி, கொன்று இறைச்சியாக்கி விற்பனை செய்வதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய நேற்று (23)  மாலை  சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது, தோட்ட தேயிலை மலையில் குறித்த மரையின் தலை, கால்கள் மற்றும் வால் என்பன மீட்கப்பட்டதுடன், மரை இறைச்சி விற்பனை செய்தார் என்ற சந்தேகத்தின் பேரில் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்

மீட்கப்பட்ட உடற் பாகங்கள், பொகவந்தலாவை மிருக வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், சந்தேகநபரை ஹட்டன் மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக, பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்தனர்.

(நோட்டன்  பிரிட்ஜ்  நிருபர்  -எம்.கிருஸ்ணா)


Add new comment

Or log in with...