முப்படை அதிகாரிகள், படைவீரர்களின் விடுமுறைகள் இரத்து

முப்படை அதிகாரிகள், படைவீரர்களின் விடுமுறைகள் இரத்து-Leave Cancelled for All Tri forces

தத்தமது முகாம்களுக்கு திரும்பவும்

முப்படை அதிகாரிகள் மற்றும் படைவீரர்களுக்கு வழங்கப்பட்டிருந்த அனைத்து விடுமுறைகளும் இரத்து செய்யப்படுவதாக, பாதுகாப்பு அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, அனைத்து படைவீரர்களையும் தத்தமது முகாம்களுக்கு திரும்பி அறிக்கையிடுமாறு பணிக்கப்பட்டுள்ளது.

தற்போது விடுமுறையில் உள்ள படைவீரர்கள் தமது தலைமை அதிகாரிகளை தொடர்பு கொண்டு இது தொடர்பான மேலதிக அறிவுறுத்தல்களை பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.

முப்படை அதிகாரிகள் மற்றும் படைவீரர்களுக்கு வழங்கப்பட்டிருந்த அனைத்து விடுமுறைகளும் இரத்து செய்யப்படுவதாக பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குரணரத்னவினால் ஒப்பமிடப்பட்டு முப்படைகளின் தளபதிகளுக்கு இன்று அனுப்பி வைக்கப்பட்ட அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை கடற்படை மற்றும் இராணுவ உறுப்பினர்கள் ஒரு சிலருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் இவ்வறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


Add new comment

Or log in with...