Friday, February 21, 2020 - 2:44pm
திடீர் மின் தடை காரணமாக களனி கங்கை தெற்கு நீர் தேங்கு திட்டத்தின் மூலம் நீரை வழங்குகின்ற ஒருசில பகுதிகளுக்கு நீர் விநியோகத்தை இடைநிறுத்த வேண்டி ஏற்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
இதற்கமைய பேலியகொடை, வத்தளை, ஜா-எல, கட்டுநாயக்க, சீதுவை, களனி, பியகம, மஹர, தொம்பே, கம்பஹா ஆகிய பகுதிகளுக்கு நீர் வெட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மின் தடை சீர்செய்யப்படும் வரை நீர் விநியோகத் தடை நீடிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Add new comment