216
நாட்டில் நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான இரண்டு வழக்குகளில் தமிழகத்தில் மேலும் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய புலனாய்வு பிரிவினர், இந்த நால்வரையும் கைது செய்துள்ளனர். தமிழகத்தின் 11 இடங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளிலே, இவர்கள் கைதானதாக இந்திய புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது. சென்னை அரபி கல்லூரி மற்றும் கோவை அரபிக்கல்லூரி ஆகியவற்றுடன் இணைந்த இடங்களிலேயே இச்சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.
அரபு வகுப்புக்களூடாக மாணவர்களை தீவிரவாத தாக்குதல்களுக்கு ஊக்குவிக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டதாக இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.