முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் மாஅதிபர் அநுர சேனாநாயக்க காலமானார்.புற்றுநோய் தொடர்பில் குறிப்பிட்ட சில காலமாக, சிகிச்சையைப் பெற்று வந்த அவர், இன்று (26) காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.ரக்பி வீரர் வசீம் தாஜுதீன் கொலை தொடர்பிலான பிரதான சந்தேகநபராக அவர் பெயரிடப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.