101 கிலோ ஹெரொயின்: மற்றொருவர் கைது

Rizwan Segu Mohideen
றிஸ்வான் சேகு முகைதீன்
 
பதிப்பு 02
 
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் இரு சந்தேகநபர்கைள கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 
பதிப்பு 01
 
தென்கடலில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது கைப்பற்றப்பட்ட 101 கிலோ கிராம் ஹெரோயின் தொடர்பில் இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
 
இன்று (04) அதிகாலை, இந்தியாவிலிருந்து இலங்கை வந்த குறித்த நபரை, கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 
மொஹமட் முவாஸ் எனும் பெயருடைடைய குறித்த பிரதான சந்தேகநபர், தெஹிவளை, ஆசிறி மாவத்தை, களுபோவில பிரதேசத்தைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
 
கடந்த சனிக்கிழமை (02) தென்கடலில் மேற்கொள்ளப்பட்ட குறித்த சோதனை நடவடிக்கையின் போது 14 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.
 
குறித்த சம்பவம் தொடர்பில், இலங்கையைச் சேர்ந்த பிரதான சந்தேகநபரை தேடும் பணியில் ஈடுபட்டு வந்த பொலிஸார், அவர் இலங்கையிலிருந்து வெளிநாட்டுக்கு தப்பிச் செல்லவோ, வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு வர முயன்றாலோ கைது செய்யுமாறு, நேற்றைய தினம் (03) போதைப் பொருள் தடுப்பு பொலிஸாரால் கட்டுநாயக்க விமானநிலையத்தின், குடிவரவு குடியகல்வு அதிகாரிகளுக்கு தெரிவியப்படுத்தியிருந்த நிலையில், சந்தேகநபரை இன்று விமானநிலையத்தில் கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

Add new comment

Or log in with...