சென்​னையிலிருந்து இலங்கைக்கு ஹெரோயின் கடத்தல்

சென்னையிலிருந்து இலங்கைக்கு சுமார் 1 1/2 கிலோ ஹெரோயின் போதைப் பொருளை கொண்டு வந்த நபர் ஒருவர் நேற்று விமான நிலைய போதை ஒழிப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

விமான நிலைய போதை ஒழிப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்தே சென்னை வாசியான மேற்படி நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.   
 
இவரது பயணப் பொதியில் ஒரு கிலோ 650 கிராம் எடை கொண்ட போதைப் பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.   
 
சென்னையிலிருந்து நேற்றுக் காலை 4.10 மணிக்கு கட்டுநாயக்க வந்தடைந்த யு.எல். 126 ரக விமானத்தின் மூலம் வருகை தந்த நபரிடமிருந்தே மேற்படி ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.   
 
கட்டுநாயக்க விமான நிலைய போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகலடிப்படையில் குறித்த சந்தேக நபர் சோதனையிடப்பட்ட போதே அவரது பொதிக்குள்ளிருந்து ஹெரோயின் மீட்கப்பட்டது.
 
சந்தேகநபரை கைது செய்துள்ள பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.    
 
லக்ஷ்மி பரசுராமன்   

Add new comment

Or log in with...