Wednesday, January 20, 2016 - 11:15am
எரிபொருள் விலைக்கான புதிய சூத்திரம் இன்று (20) அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
நாட்டில் சரியான எரிபொருள் விலையொன்றை உருவாக்குவதே தமது நோக்கமென பெற்றோலியம் மற்றும் பெற்றோலிய வாயு அமைச்சர் சந்திம வீரகொடி தெரிவித்தார்.
குறித்த விலை சூத்திரம், பொதுமக்களால் அங்கீகரிக்கக்கூடிய ஒன்றாய அமையவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
கடந்த ஜனவரி 13 ஆம் திகதி இது குறித்து, அமைச்சரவையில் கலந்துரையாடப்பட்ட போதிலும், அது குறித்தான விலைச் சூத்திரத்திற்கான அனுமதி பிற்போடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Add new comment