Sunday, January 10, 2016 - 4:00pm
இந்தியாவிலிருந்து கடல் வழியாக சட்டவிரோதமான முறையில் சிறிய படகு மூலம் கொண்டு வரப்பட்டுக் கொண்டிருந்த கடலட்டைகளுடன் ஐந்து பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கற்பிட்டி கப்பலடி பிரதேசத்தில் வைத்தே இவர்கள் இவ்வாறு கடலட்டைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை கடற்படையின் விஜய படையணியின் அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடல் வழியாகக் கொண்டு வரப்பட்ட சுமார் ஒரு கோடி ரூபாய் பெறுமதியான 950 கிலோ கடலட்டைகள் கப்பலடி பிரதேசத்திற்கு கொண்டுவரப்பட்டு கரைக்குக் கொண்டு செல்ல தயாரான போது கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் குறித்த படகிலிருந்த ஐவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களுடன் கைப்பற்றப்பட்ட கடலட்டைகள் புத்தளம் உதவி கடற்றொழில் பரிசோதகர் அலுவலக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
புத்தளம் உதவி கடற்றொழில் பரிசோதகர் அலுவலக அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
(புத்தளம் விஷேட நிருபர் எம். எஸ். முஸப்பிர்)
Add new comment