இங்கிரியவில் துப்பாக்கிச் சூடு; ஒருவர் பலி

இங்கிரிய, ஹந்தபான்கொட பிரதேசத்தில் வசிக்கும் 28 வயது நபர் ஒருவர் நேற்றிரவு (03) இனம் தெரியாத நபர் ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
 
இறந்தவர், ஹொரணகே நிலந்த என அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, இவர் தனது வீட்டில் தனியாக இருந்த வேளையிலேயே இத்துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
 
குறித்த நபரின் தந்தை நேற்றிரவு (03) மரண வீடொன்றுக்குச் சென்றிருந்த வேளையிலேயே, இவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
 
அவரது தந்தை வீடு திரும்பிய வேளையில், இந்த இளைஞன், வீட்டின் நுழைவாயிலின்  அருகே, இறந்த நிலையில் காணப்பட்டிருந்ததாகவும் அப்போது வீட்டினுள்ளே தொலைக்காட்சி வேலை செய்துகொண்டிருந்ததாகவும் அவரது தந்தை தெரிவித்துள்ளார்.
 
எனவே, குறித்த இளைஞன் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்த வேளையில், யாரே அழைப்பதை உணர்ந்து வெளியில் வந்திருக்கலாம் எனவும் இதன்போது துப்பாக்கிப் பிரயோகத்திற்கு இலக்காகியிருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
 
இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Add new comment

Or log in with...