Wednesday, September 16, 2015 - 5:00pm
இந்தியாவுக்கான மூன்று நாள் விஜயத்தை நிறைவு செய்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று (16) இலங்கை வந்தடைந்தார்.
பிற்பகல் 4.45 மணியளவில் இந்திய விமான சேவைக்கு சொந்தமான AI 275 எனும் விமானத்தின் மூலம் கட்டுநாயக்கா சர்வதேச விமானநிலையத்தை வந்தடைந்தார்.
நேற்றுமுன்தினம் (14) இலங்கையிலிருந்து புறப்பட்ட அவர் நேற்று (15) இந்தியாவின் பிரதமர் மோடியைச் சந்தித்ததோடு இன்று (16) ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியுடனும் உத்தியோகபூர்வ சந்திப்பை மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இது தவிர பல்வேறு முக்கியஸ்தர்களுடனும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Add new comment