பயன்படாத சேமிப்பகத்திலேயே நெல் களஞ்சியப்படுத்தப்பட்டது – பிரதமர்

மத்தளை விமானநிலையத்திற்கு வரும் விமானங்களின் எண்ணிக்கையில் எவ்வித முன்னேற்றமும் இல்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று (03) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
 
அத்துடன் சர்வதேச பேணுதல்கள், முறைமைகளுக்கு அமைய இவ்விமானநிலையம் கட்டப்படவில்லை எனத் தெரிவித்த பிரதமர் இது குறித்த உரிய தரப்பினரிடம் கலந்துரையாடியதை அடுத்தே இவ்விடயம் தெளிவானதாக அவர் இதன் போது தெரிவித்தார்.
 
இவ்வேளையில் மத்தளை விமான நிலையத்தில் நெல் களஞ்சியப்படுத்தமை தொடர்பில் கேள்வி எழுப்பினார்.
 
விமானநிலைய தேவைக்கு பயன்படுத்தப்படாத பொருட்கள் சேமிக்கப்படும் இடத்திலேயே நெல் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் இதன்போது பதிலளித்தார்.
 
மேலும் உள்ளூர் விவசாயிகளினால் அறுவடை செய்யப்பட்ட நெல்லை இவ்வாறு கொள்வனவு செய்து சேமிப்பதற்கு முன்னாள் அரசாங்க உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவிப்பது ஏன் என புரியவில்லை எனத் தெரிவித்தார்.
 

Add new comment

Or log in with...