Thursday, July 16, 2015 - 10:45am
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான விருப்புவாக்கு இலக்கங்கள் இன்று வழங்கப்படவுள்ளது.
ஒவ்வொரு கட்சியினது செயலாளர்கள் அல்லது சுயேச்சைக் குழுக்களின் தலைவர்களால் குறிப்பிட்ட மாவட்ட செயலகத்தின் மூலம் தங்களது உறுப்பினர்களுக்கான விருப்பு வாக்கினை பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்தேர்தலில் மொத்தமாக 196 பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் உள்ளிட்ட 6151 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Add new comment