Thursday, December 1, 2016 - 11:17am
றிஸ்வான் சேகு முகைதீன்
வாகனத்தின் பிரதான விளக்கை ஒளிரச் செய்தவாறு, கவனயீனமாக பாதைகளில் வாகனத்தை செலுத்தும் முக்கியஸ்தர்கள் தொடர்பில் அறிக்கை ஒன்றை வழங்குமாறு பொலிஸ் மாஅதிபரிடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் ஜனாதிபதிக்கு கிடைக்கப்பெற்றுள்ள பல்வேறு முறைப்பாடுகளை கருத்திற்கொண்டே, ஜனாதிபதி குறித்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
Add new comment