றிஸ்வான் சேகு முகைதீன்
களனி கங்கையை மாசுபடுத்திய குற்றச்சாட்டில் 35 பேரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதில் 25 பெண்கள் உள்ளடங்குவதாக தெரிவித்த பொலிஸ் கடற்படை பிரிவினர், களனி ஆறு மற்றும் ஹமில்டன் கால்வாய் ஆகியவற்றில் குப்பைகளை கொட்ம்போது இவர்களைக் கைது செய்துள்ளதாக தெரிவித்தனர்.
இவர்களுள், பேலியகொட, வத்தளை பிரதேசங்களைச் சேர்ந்த 20 பெண்கள் மற்றும் 08 ஆண்களும், ஹேகித்த மற்றும் மோதறையைச் சேர்ந்த 05 பெண்கள் மற்றும் 02 ஆண்களும் உள்ளடங்குவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
குறித்த நபர்களை பொலிஸ் பிணையில் விடுவித்துள்ளதாக தெரிவித்த பொலிஸார், அவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Add new comment