247
மாத்தளை அருள்மிகு ஸ்ரீமுத்துமாரியம்மன் தேவஸ்தான மாசிமக மகோற்சவத்தின் பஞ்சரத பவனி இன்று (24) மிகச் சிறப்பாக நடைபெறுவதுடன், விசேட மண்டப பூஜைகளைத் தொடர்ந்து முற்பகல் 11.00 மணியளவில் உற்சவ மூர்த்திகள் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்கள்.
இந்நிலையில் நாளை மறுதினம் (26) காலை 7.00 மணிக்கு பாற்குட பவனியும் அதனைத் தொடர்ந்து தீர்த்தோற்சவமும் நடைபெறும். 27ஆம் திகதி காலை ஸ்ரீசண்டேஸ்வரி உற்சவமும்
அன்று மாலை பூங்காவனத் திருவிழாவும் நடைபெறுமென, தேவஸ்தான அறங்காவலர் சபை தலைவர் தெரிவித்தார். தேர்த் திருவிழாவையிட்டு மாத்தளை நகரம் விழாக்கோலம் பூண்டு காணப்படுகிறது.
மாத்தளை சுழற்சி நிருபர்