223
பூநகரிப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பரந்தன்கிராய் பகுதியில் ஏ32 வீதியில் நேற்று (19) இரவு 8.00 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியானதுடன், மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
டிப்பர் வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் மோதியே மேற்படி விபத்து சம்பவித்துள்ளது.
இதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த கௌதாரிமுனைப் பகுதியைச் சேர்ந்த 56 வயதான நபர் பலியானதுடன் 34வயதான நபர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
மேற்படி விபத்துத் தொடர்பான மேலதிக விசாரணைகளை பூநகரிப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
சாவகச்சேரி விசேட நிருபர்