கலாசூரி இ.சிவகுருநாதனின் ஊடகப் பணியை கௌரவிக்கும் முகமாக அவுஸ்திரேலிய தலைநகர் கன்பராவில் ‘இலங்கை இதழியலில் சிவகுருநாதன்’ என்று நூல் நாளை சனிக்கிழமை வெளியிடப்படவுள்ளது.
தினகரன் பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியர் கலாசூரி இ. சிவகுருநாதனின் இருபதாம் ஆண்டு நினைவு நூலான ‘இலங்கை இதழியலில் சிவகுருநாதன்’ வெளியீட்டு விழா நாளை 20.01.2024 சனிக்கிழமை மாலை 4.30 மணிக்கு அவுஸ்திரேலிய தலைநகர் கன்பராவில் நடைபெறவுள்ளது. கன்பராவில் உள்ள தமிழ் மூத்த பிரஜைகள் சங்க மண்டபத்தில் (Tamil Senior Citizen Hall,11 Bromby Street, Isaacs ACT 2607) சட்டத்தரணி, இலக்கிய ஆர்வலர், எழுத்தாளர் க. திருவருள் வள்ளல் தலைமையில் இந்நிகழ்வு நடைபெறவுள்ளது.
தினகரன் பத்திரிகையில் நீண்ட காலம் பிரதம ஆசிரியராக பணியாற்றிய கலாசூரி இ.சிவகுருநாதன் மிக இலகுவான மொழியில் எல்லோருக்கும் புரியக்கூடிய வகையில் கருத்துக்களை சொல்வதில் வல்லவர். தினகரனில் தொடங்கிய கலாசூரி சிவகுருநாதனின் ஊடகப்பணி மற்றும் இலக்கியப்பணி இன்று வரை அவரை எவராலும் மறக்க முடியாத ஆளுமை உள்ளவராக நிலைநிறுத்தியமை அவரின் வாழ்வியல் சாதனையாகும். அவரின் இருபதாம் ஆண்டு நினைவாக ‘இலங்கை இதழியலில் சிவகுருநாதன்’ எனும் நூலின் தொகுப்பாசிரியரான ஐங்கரன் விக்கினேஸ்வரா நூலின் ஏற்புரையை வழங்குவார்.
இலங்கை பத்திரிகையியலில் வரலாற்றுச் சாதனை படைத்த இரத்தினதுரை சிவகுருநாதன் அவர்களின் இருபதாம் ஆண்டு நினைவாக “இலங்கை இதழியலில் சிவகுருநாதன்” எனும் நூல் வெளியாகி உள்ளது.
தினகரனில் தொடங்கிய கலாசூரி சிவகுருநாதனின் ஊடகப்பணி மற்றும் இலக்கியப்பணி இன்று வரை எவராலும் மறக்க முடியாத ஆளுமை உள்ளவராக தொடர்கின்றது என்பது அவரின் வாழ்வியல் சாதனையாகும். அவரின் இருபதாம் ஆண்டு நினைவாக (08/08/2003) “இலங்கை இதழியலில் சிவகுருநாதன்” எனும் நூலை ‘ஐங்கரன் விக்கினேஸ்வரா’ தொகுத்துள்ளார்.