கொழும்பு தேசிய கண் வைத்தியசாலையில் இன்று (14) காலை 8.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் கைவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சின் செயலாளருடனான கலந்துரையாடலின் பின்னர் அடையாள வேலைநிறுத்த போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
கொழும்பு தேசிய கண் வைத்தியசாலையில் அடையாளப் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படுவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இன்று (14) காலை 8.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை இந்த அடையாளப் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர், வைத்தியர் சமில் விஜேசிங்க குறிப்பிட்டார்.
வைத்தியசாலையின் நிர்வாக அதிகாரியின் அசமந்தப்போக்கு தொடர்பில் வைத்தியசாலை பணிப்பாளரும் சுகாதார அமைச்சும் உரிய முறையில் பதிலளிக்கத் தவறியமையினால் இந்த அடையாளப் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், பணிப்பகிஷ்கரிப்பு காலத்தில் அவசர சிகிச்சைகள் மாத்திரம் முன்னெடுக்கப்படும் என வைத்தியர் சமில் விஜேசிங்க இதன்போது குறிப்பிட்டார்.