கல்முனை 23ஆம் வட்டாரத்துக்கான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக் கிளைகளை புனரமைப்புச் செய்வதற்கான விசேட கூட்டம், சாய்ந்தமருது பிரதேசத்தில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை (11) நடைபெற்றது. கல்முனை மாநகர முன்னாள் முதல்வரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசியல் அதி உயர்பீட உறுப்பினருமான கலாநிதி சிராஸ் மீராசாகிப் தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற்றதுடன், இதன்போது கட்சியினுடைய யாப்புக்கமைய 23ஆம் வட்டாரத்திலுள்ள 14, 16, 17 ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளுக்கான நிர்வாக சபைகள் தெரிவு செய்யப்பட்டன.
மு.கா. கட்சியின் வளர்ச்சியில் கிளை நிர்வாகிகளின் வகிபாகம் இன்றியமையாததென்பதுடன், தனிப்பட்ட நலனுக்கு அப்பால் அனைவரும் சமூக நலன் கருதி அர்ப்பணிப்புடன் உழைக்க வேண்டுமென, அக்கட்சித் தவிசாளர் அப்துல் மஜீத் தெரிவித்தார்.
சாய்ந்தமருது விசேட, கல்முனை விசேட நிருபர்கள்