ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷுக்கு, அமைச்சர் ஜீவன் தொண்டமான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மலையகத் தமிழ் மக்களை இலங்கைச் சமூகத்துடன் முழுமையாக ஒன்றிணைப்பதை மேற்பார்வையிடுதல் மற்றும் நுவரெலியா, பதுளை, இரத்தினபுரி மாவட்டங்களில் உள்ள பிரச்சினைகளை ஆராய்தல் ஆகிய பொறுப்புகளும் அவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இப்பணிகளை சிறப்பாக அவர் முன்னெடுப்பாரென நம்புவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
“மலையக அரசியல்வாதியாக, தொழிற்சங்கவாதியாக செயற்படும் எமது சமூகத்தை சேர்ந்த ஒருவருக்கு, இவ்வாறான பொறுப்பு வழங்கப்பட்டுள்ளமை மகிழ்ச்சியளிக்கிறது. அவரால் முன்னெடுக்கப்படும் பணிகளுக்குத் தேவைாயன ஆதரவை வழங்கவும் அமைச்சர் ஜீவன் தொண்டமான் முன்வந்துள்ளார்.