314
கடற்படையினர் இவ்வருடத்தில் 21 ஆயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருட்களை கைப்பற்றியுள்ளனர்.
இதுவரை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களில், சுமார் 21,000 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாகவும் கடற்படை தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு ஜனவரி முதல் நவம்பர் 26 வரை மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 20,576 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக கடற்படை குறிப்பிட்டுள்ளது.
3,641 கிலோ 15 கிராம் கேரள கஞ்சாவும் 50 கிலோ 288 கிராம் உள்ளூர் கஞ்சாவுமே, கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இவற்றின் பெறுமதி,1,456 மில்லியன் ரூபா என கடற்படை தெரிவித்துள்ளது.