எதிர்வரும் பங்களாதேஷ் பிரீமியர் லீக் பருவத்தில் சட்டொக்ராம் சலஞ்சர்ஸ் அணியில் ஆட இலங்கை விக்கெட் காப்பாளர் மற்றும் துடுப்பாட்ட வீரர் குசல் மெண்டிஸ் ஒப்பந்தமாகியுள்ளார். இதனை அந்த அணி தனது பேஸ்புக் பக்கத்தில் உறுதி செய்துள்ளது.
இலங்கை அணிக்காக நீண்ட காலமாக ஆடிவரும் குசல் மெண்டிஸ், தசுன் ஷானக்கவின் காயம் காரணமாக அணித் தலைமை பொறுப்பையும் ஏற்றுள்ளார்.
ஆரம்ப வரிசையில் அதிரடியாக ஆடக் கூடியவரான அவர் குறிப்பாக பங்களாதேஷுக்கு எதிராக சிறப்பாக செயற்பட்டு வருகிறார்.
எனினும் பங்களாதேஷ் பிரீமியர் லீக் தொடருக்கான வீரர்கள் தேர்வு கடந்த செப்டெம்பர் 24 ஆம் திகதி நிறைவடைந்திருந்து.
இதில் மூத்த வீரர்களான ஷுவகதா ஹோம், சவுர் ரஹ்மான், நிஹாதுஸ்ஸமானை சட்டொக்ராம் அணி தக்கவைத்துள்ளது.
அடுத்து பங்களாதேஷ் பிரீமியர் லீக் தொடர் எதிர்வரும் 2024 ஜனவரியில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.