நாட்டின் சில இடங்களில் மழை; காற்றின் வேகமும் அதிகம்

- கடற்றொழிலில் ஈடுபடுவோர் அவதானம்

இன்றையதினம் (08) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய, தென் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

கடற்றொழிலில் ஈடுபடுவோர் அவதானம்
புத்தளத்திலிருந்து காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரையிலும், மாத்தறையிலிருந்து பொத்துவில் வரையான கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது மணிக்கு (50-60) கிலோமீற்றர் வரை அதிகரிக்கலாம்.

கடற்படை மற்றும் மீனவ சமூகத்தினர் அவதானமாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

அனர்த்தங்கள் தொடர்பில் 117 இற்கு அழைக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கேட்டுக் கொண்டுள்ளது.


Add new comment

Or log in with...