தமிழர் பிரச்சினைகளுக்கு முஸ்லிம்களும் குரல் கொடுக்க வேண்டும்

தமிழர் பிரச்சினைகளுக்கு முஸ்லிம்களும் குரல் கொடுக்க வேண்டும்

முஸ்லிம் அரசியல் தலைமைகளும், தமிழர்களின் பிரச்சினைகளுக்காக குரல் கொடுக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் கேட்டுக் கொண்டுள்ளார்.

தமிழ் அரசியல் கைதிகள் மற்றும் தோட்டத் தொழிலாளரின் சம்பள விவகாரம் தொடர்பாக குரல் கொடுக்க வேண்டும்.

தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவொன்றிலேயே, அவர் குறித்த வேண்டுகோளினை விடுத்துள்ளார்.

முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் தொடர்பிலும், தடுப்புக்காவலில் உள்ள ஹிஜாஸ் ஹிஸ்புல்லா தொடர்பிலும், தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் பேசி வருவதாகவும் மனோ கணேசன் அதில் சுட்டிக்காட்டியுள்ளார்.


Add new comment

Or log in with...