- எந்தவொரு தொற்றுநோய் வேளையிலும் நோயாளிகளை தனிமைப்படுத்தி வைத்து சிகிச்சை அளிப்பதே இதன் நோக்கம்
IDH வைத்தியசாலையை ஒட்டிய வகையில் நவீன வசதிகளுடன் கூடியதாக வார்ட் தொகுதியொன்று அமைக்கப்பட்டு வருவதாக, சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
எந்தவொரு தொற்றுநோய் வேளையிலும் நோயாளிகளை தனிமைப்படுத்தி வைத்து சிகிச்சை அளிப்பதே இதன் நோக்கமாகும் என, சுகாதார அமைச்சின் கொவிட்-19 அவசர சிகிச்சை மற்றும் சுகாதார தொகுதிக்கான பணிப்பாளர், வைத்தியர் ஜயசுந்தர பண்டார தெரிவித்தார்.
இதன் ஆரம்ப திட்டங்கள் விரைவாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும், அவர் தெரிவித்தார்.
கொவிட் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான சிகிச்சையின்போது, IDH வைத்தியசாலையில் காணப்படுகின்ற வசதிகளை சிறந்த முறையில் முகாமைத்துவம் செய்து, உச்ச சேவைகளை வழங்கியதாக, அவர் தெரிவித்தார்.
Add new comment