Wednesday, July 8, 2020 - 10:35am
தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு சில புகையிரத சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக, புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
கொவிட்-19 காரணமாக குறித்த புகையிரத சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
எதிர்வரும் 18ஆம் திகதி முதல் அவற்றை மீண்டும் செயற்படுத்தவுள்ளதாக, புகையிரத பிரதி பொது முகாமையாளர் காமினி செனவிரத்ன தெரிவித்தார்.
Add new comment