சொய்சாபுர உணவக தாக்குதல்; காருடன் சாரதி கைது

கல்கிஸ்ஸை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சொய்சாபுர பிரதேசத்திலுள்ள உணவகம் ஒன்றின் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவத்துக்காக பயன்படுத்தப்பட்ட காருடன் அதன் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

பிலியந்தலையைச் சேர்ந்த 50 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த மே  மாதம் 19ஆம், 29ஆம் திகதிகளில், கல்கிஸ்ஸை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உணவகமொன்றுக்கு சேதம் விளைவித்த மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் தொடர்பில், மேல் மாகாண புலனாய்வு பிரிவினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இதனைத் தொடர்ந்து குறித்த சந்தேகநபர் காருடன் நேற்றிரவு (09) கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

சந்தேகநபரை, மேலதிக விசாரணைகளுக்காக கல்கிஸ்ஸை பொலிஸாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 

இச்சம்பவம் தொடர்பில் பல சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்பதோடு அண்மையில் 'கொனா கோவிலே ராஜா' எனும் பிரதான சந்தேகநபரை கைதுசெய்ய சென்றபோது இடம்பெற்ற பரஸ்பர துப்பாக்கிச் சூட்டில் குறித்த சந்தேகநபர் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...