Monday, April 6, 2020 - 9:19am
பொகவந்தலாவை, லொய்னோன் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 05 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
லொய்னோன் பகுதியில் ஹெகெல்கமுவ காட்டுப்பகுதியில் மாணிக்கக்கல் அகழ்வு நேற்று (05) இடம்பெற்றுள்ளது.
பொகவந்தலாவை பகுதியைச் சேர்ந்த 27, 28, 34, 35 வயதுடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள இச்சந்தேகநபர்களை இன்று (06) ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
Add new comment